உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே யென்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ வினி. (15)

இ-ள். தேவர்கள் (உயர்வறவுயர்ந்த இறைவனது பெருமையை ) நினைந்து (அவனை வழிபடும் வழிபாட்டில்) ஈடு பட்டிருந்து மிக்க நறுமலர்களால் அருச்சித்துப்போற்றியும் அப்பெருமானது திருவடியினை உள்ளவாறு பொருந்தி மகிழுமாறு அறிந்திலர். (அங்ஙனமாகவும், இறைவனது பெருமையையும் எனது சிறுமையையும்) நினைந்து செயலற்றிருந்து மின்னலொடு விளங்கும் செவ்வானத்தை யொத்த சிவந்த சடையினையுடையவனே, வேதப்பொருளாய் விளங்குபவனே என (இவ்வாறு சொல்லளவிற்) போற்றியிருக்கும் எளியேற்கு இனி அப்பெரியோன் எங்ஙனம் அருள் செய்வானோ? எ-று

வானவர்கள் செய்யும் சிறப்புடைய பூசனைக்கும் எளிவந்தருளாத இறைவன், எளியேனது போற்றுதலுக்கு எங்ஙனம் எளிவந்தருள்வான் என இரங்கிக் கூறியவாறு.

இனியே நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - யினியோர்
வினைக்கடலை யாக்குவிக்கு மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோங் காண். (16)

இ-ள். நெஞ்சமே, இப்பொழுதோ நாம் இறைவனது திருவடியாகிய புணையினை (தெப்பத்தினை)ச் சேரப்பெற்றோம். (ஆதலால்) உய்திபெற்றோம்.