பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 நிலை யாதாய் முடியும் என அம்மையார் இறைவன்பால் வைத்த எல்லேயற்ற பேரன்பின் திறத்தால் இரங்கிய வாறு காண்க. பொறி-நல்வினேப் பேறு, பொறியின் மையார்க்கும் பழியன்று”என்பது திருக்குறள். இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை யிகழ்வரே கண்டீர் - இவர் தமது பூக்கோல மேனிப் பொடி பூசி யென் பணிந்த பேய்க் கோலங் கண்டார் பிறர் . (29) 29. இ-ள் (அடியார்க்கு எளிவந்தருளும் பெருமா ஞ கிய) இவரை முழுமுதற்பொருள் என்று உணரவல்ல ஞான மிலா தா ரெல்லாம் இவரை யிகழ்ந்துரைத்தல் முறையாகுமோ? (நம்பெருமானுகிய) இவர் செந்தா மரை மலர்போன்று செந் நிற முடையதாய்த் திகழும் தமது திருமேனியிலே வெள்ளிய திருநீற்றினைப் பூசி எலும்பு மாலேயை யணிந்தமையால் அஞ்சத்தகுந்த புறக்கோலத்தினேயே பிறர் கண்டனர். எ-று இறைவர் தமக்கு அணியராய்த் தோன்றிய எளிமைத்திறம் விளங்க அம்மையார் இவர் என்னும் அணிமைச் சுட்டினல் மு. ம் மு ைற சுட்டினர். பொருளுணர மாட்டா தார் - முழுமுதற்பொருள் இவரே யென்று உணரவல்ல அறிவுமதுகை யில்லாதார். இகழ்வதே இகழ்தல் முறையோ? பூக்கோலமேனி - தாமரை மலர்போலும் சிவந்த அழகிய திருமேனி. பேய்க் கோலம் - கண்டர்ர்க்கு அச்சத்தை விளேக்குந் தோற்றம். பிறர் பேய்க்கோலம் கண்டார் யானே அத்திருக்கோ லத்திற்கு உள்ளீடாகிய பூக்கோலமேனி யின் பொலிவினேயே கண்டு அகமகிழ்கின்றேன்" என்பது கருத்து.