பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 திறத்தான் மடநெஞ்சே சென் றடைவ தல்லாற் பெறத்தானு மாதியோ பேதாய்-நிறத்த இருவடிக்க னேழைக் கொருபாக மீந்தான் திருவடிக்கட் சேருந் திரு. 47 இ-ள் : அறியாமை பொருந்திய நெஞ்சமே நிறம் பொருந்திய மாவடு வகிரன்ன கண்களே யுடைய உமாதேவியார்க்குத் தனது ஒரு பாகத்தைத் தந்த இறைவனது திருவடி நீழலிலே சேர்ந்து நுகரும் திருத் தகவிற்ருகிய பேரின்பத்தை அவனே இடைவிடாது நெஞ்சத்துள்ளே நினேந்து வாழும் திருவருள் நெறியாற் சென்று அடைவதன்றி, அறிவிலியாகிய நீ நினது அரிய முயற்சி யொன்றிேைலயே பெறுதற்குரியை ஆவாயோ ? (ஆகாய்) எ-று. 'திரு, பெறத்தானும் ஆதியோ’ என இயைத் துரைக்க. சென்றடையாத தி ரு வு ைட யானே ? எனவும், எந்தையிச னெம்பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச் சிந்தைசெய் பவர்க்கல்லால் சென்றுகை கூடுவதன் ருல் கந்த மாமல உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரைமேல் அந்தண் சோலே நெல் வாயில் அரத்துறை யடிகள் தம் அருளே’ எனவும் வரும் அருளிச் செயல்கள் இவண் ஒப்பு நோக்கத் தகுவனவாகும். ஏழைக்கு ஒருபாகம் ஈந்தான்’ என்ற குறிப்பும் அது. வடி-மாவடு.