பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5: வடிவுடைய செங்கதிர்க்கு மாறய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ-கடியுலவு சொன் முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேற் றிங்க ணிலா. (63) இ-ள் : சொல்லின் எல்லேயைக் கடந்து விளங்கும் சோதிப்பொருளாகிய பெருமானே, மனம் வீசும் நினது திருமுடிமேல் விளங்கும் பிறைத் திங்களானது, தேயாத வடிவுடைய முழு மண்டிலமாகிய சிவந்த சூரியனுக்கு மாருகப் பகலிலும் நெடிது இயங்கி நிலவொளியை வீசவல்லதோ ? சொல்வாயாக எ-று. கடியுலவு நின் முடிமேல் திங்கள், செங்கதிர்க்கு மாருய்ப் பகலே நெடி துலவி நின்று நிலா எறிக்குங் கொல்லோ ? எனக் கூட்டிப் பொருள் கொள்க. கடிநறுமணம், சொல் மு. டி வு ஒன்று இல்லாத-உரை முடிவுக்கு அகப்படாது அப்பாற்பட்ட, எ ல் ல ள அண்டங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்கும் இறைவனே யடைந்த தேய்மதியும் தேயாமண்டிலமாகிய ஞாயிற் றின் கதிர்களால் ஒளி மழுங்காது பகற்காலத்திலும் நெடி து நின்று தனது குளிர்ந்த நிலவொளியைப் பரப்புவதாயிற்று என அம்மையார் தாம் கண்ட தெய்வக் காட்சியை இத்திருப்பாடலில் குறிப்பால் விளக்கிய திறம் அறிந்து மகிழத்தக்கதாகும். நில விலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி யுழிதருமா கொல்லோ-நில விருந்த செக்கரவ் வானமே யொக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலேயே போன்று. 64