பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 உலக மக்கள் அ ன் பி ைல் ஊ டி யு ம் கூடியும் போகம் நுகர்தலாகிய இல்வாழ்க்கையினே இனிது நிகழ்த்துதற் பொருட்டு’ என அம்மையார் குறிப்பால் அறிவுறுத்தருளினராயிற்று. திருமுருகாற்றுப்படையில் "ஒரு முகம் மடவால் வள்ளியொடு நகையமர்ந்தன் றே’ என வருந் தொடர்க்கு நச்சிஞர்க்கினியர் எழுதிய உரை விளக்கமும் தென் பாலு கந்தாடும் தில்லேச் சிற்றம்பு லவன்......... பெண்பாலு கந்தி லனேற் பேதா யிரு நிலத்தோர், விண்பாலியோகெய்தி வீடுவர் காண் சாழலோ என வரும் மேற்கோளும் இங்குக் கருதத் தக்கன. முடிமேற் கொடுமதியான் முக்கனன் நல்ல அடிமேற் கொடுமதியோங் கூற்றைப்-படிமேற் குனியவல மாமடிமை கொண்டாடப் பெற்ருேம் இனியவல முண்டோ எமக்கு. (69) இ-ள் : திருமுடிமேல் வளைந்த பிறையினே யணிந் தவனும் (ஞாயிறு, திங்கள், தீயென்னும்) மூன்று கண்களேயுடையவனும் ஆகிய இ றை வ னு டை ய நன்மை பொருந்திய திருவடிகளே யாம் எமது தலைமேற் கொண்டமையால் இனி (உயிரைக் கவரவரும்) கூற்று வனேக் கண்டு சிறிதும் மதிக்கமாட்டோம். (அடியார் கஅளக் கண்டால்) நிலத்தின் மீது வீழ்ந்து வணங்க வல்லோம் ஆகிய அடிமைத் திறத்தைப் பாராட்டி மேற்கொள்ளப் பெற்ருேம். (இத்தன்மையினே மாகிய) எங்களுக்கு எத்தகைய துன்பமும் உளதாமோ(இல்லே) எ-று. கொடுமதி-வளைவுடைய பிறைச்சந்திரன். இறை வன் திருவடி பிறவிப் பிணிக்கு மருந்தாகலின்