பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39



‘எல்லாம் அதிலேயே அடங்கியிருக்கிறது!’

இந்த உரையாடல் அன்று முதல் இன்றுவரை உலகம் எங்கும் பரவியுள்ளது. இதில் யவன வீரனின் பெருமையும் பாரத வீரரின் பெருமையும் மிகமிக உயர்ந்த நிலையை எய்திவிட்டன. அலெக்சாந்தர் போரஸின் இராச்சியத்தை அவரே ஆண்டு வரும்படி அளித்தான். ஜீலம் நதிக் கரையில் தன் வெற்றியின் நினைவுக்காக ‘வெற்றி’ என்ற பெயருடன் ஒரு நகரும், தன் குதிரை பூஸிபாலஸின் நினைவுச் சின்னமாக அதன் பெயரால் ஒரு நகரும் அமைக்கும்படி தன் அதிகாரிகளுக்கு ஆணையிட்டான்.