யார் விளையாட்டு ?
23
விதவை : யாரது இந் நேரத்தில் கதவைத் தட்டுவது ? வெளியிலிருந்து பெண் குரல் : (மெதுவாக) மருதாயி அக்கா, நான்தான் சரோஜா.
மருதாயி : (ஆச்சரியத்தோடு) யார், சரோஜாவா ?
[கதவை விரைவாகச் சென்று திறக்
கிறாள், ரெயிலிலிருந்து கிழவியுடன் வந்த இளமங்கை உள்ளே நுழை
கிறாள்.]
சரோஜா, இந் நேரத்தில் எப்படி வந்தாய் ?
[அவளைக் கட்டி அணைத்துக் கொள்
கிறாள்.]
சரோஜா : அக்கா, உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாமென்றுதான் வந்தேன்.
மருதாயி : திடீரென்று யாரிடமும் சொல்லாமல் ஓடிப் போய்விட்டாயே ? இந்த ஒரு வருஷமாக எங்கே இருந்தாய் ? உன்னை எங்கெல்லாமோ தேடித் தேடிப் பார்த்தானே அவன் ?
[வெளிக் கதவைத் தாழிட்டுவிட்டு
மருதாயி வருகிறாள். இருவரும்
வீட்டுத் தாழ்வாரத்தில் உட்
காருகிறார்கள்.]
சரோஜா: என்னை எதற்காகத் தேடவேண்டும் ? நான் தான் போய்விட்டேனே, அக்கா ?
மருதாயி : என்ன இருந்தாலும் நீ அப்படிப் போகலாமா? இப்பொழுது பார், என்ன ஆயிற்று ? உன்னைக் காணாமல் அவன்........
சரோஜா : (சட்டென்று) என்ன ஆயிற்று ? எல்லாம் நல்லதுதான் ஆயிற்று....