உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யார் விளையாட்டு ?

23

விதவை : யாரது இந் நேரத்தில் கதவைத் தட்டுவது ? வெளியிலிருந்து பெண் குரல் : (மெதுவாக) மருதாயி அக்கா, நான்தான் சரோஜா.

மருதாயி : (ஆச்சரியத்தோடு) யார், சரோஜாவா ?

[கதவை விரைவாகச் சென்று திறக்
கிறாள், ரெயிலிலிருந்து கிழவியுடன் வந்த இளமங்கை உள்ளே நுழை
கிறாள்.]

சரோஜா, இந் நேரத்தில் எப்படி வந்தாய் ?

[அவளைக் கட்டி அணைத்துக் கொள்
கிறாள்.]

சரோஜா : அக்கா, உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாமென்றுதான் வந்தேன்.

மருதாயி : திடீரென்று யாரிடமும் சொல்லாமல் ஓடிப் போய்விட்டாயே ? இந்த ஒரு வருஷமாக எங்கே இருந்தாய் ? உன்னை எங்கெல்லாமோ தேடித் தேடிப் பார்த்தானே அவன் ?

[வெளிக் கதவைத் தாழிட்டுவிட்டு
மருதாயி வருகிறாள். இருவரும்
வீட்டுத் தாழ்வாரத்தில் உட்
காருகிறார்கள்.]

சரோஜா: என்னை எதற்காகத் தேடவேண்டும் ? நான் தான் போய்விட்டேனே, அக்கா ?

மருதாயி : என்ன இருந்தாலும் நீ அப்படிப் போகலாமா? இப்பொழுது பார், என்ன ஆயிற்று ? உன்னைக் காணாமல் அவன்........

சரோஜா : (சட்டென்று) என்ன ஆயிற்று ? எல்லாம் நல்லதுதான் ஆயிற்று....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/33&oldid=1658037" இலிருந்து மீள்விக்கப்பட்டது