உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் விளையாட்டு?

சரோஜா: எனக்கு என் வேலை இருக்கிறது. எப்படியோ காலத்தைத் தள்ளவேண்டியது.

[எழுந்து பக்கத்திலிருந்த துணைப்பிடித்துக்கொண்டு நிற்கிறாள்.]

மருதாயி: நீ எதற்காக இங்கிருத்து யாருக்கும் சொல்லாமல் போனாய்?

சரோஜா: (சோகத்தோடு) அவர் என்னை மறந்துவிடட்டும் என்பதற்காகத்தான்.

மருதாயி: அவன் உன்னை மறக்கவே இல்லை. இனிமேல் மறக்கப்போவதும் இல்லை. அது எனக்கு நன்றாகத் தெரியும். ....நீ மாத்திரம் அவனை மறக்கப்போகிறாயா ?

சரோஜா: (அருகில் வந்து அமர்ந்து) அக்கா, என் மன நிலைமை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் என்ன செய்வது? இங்கே நான் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் வரை அவருடைய பந்துக்கள் எல்லோரும் என்னை ஏசினதும் பேசினதும் உங்களுக்குத் தெரியாதா?

மருதாயி: எல்லாம் எனக்குத் தெரியும் சரோஜா. ஆனால்....

சரோஜா: நான் அதையெல்லாம் பொருட்படுத்தினேனா? இல்லவே இல்லை. ஆனால் அவரைச் சாதிப் பிரஷ்டம் செய்துவிடுவதாகச் சொன்னதுதான் எனக்குக் கவலை யாக இருந்தது.

மருதாயி: (விசனத்தோடு) அகற்காக நீ இப்படி ஒடிப் போகலாமா?

சரோஜா: அக்கா, ஊரெல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டு அவருக்குத் தொந்தரவு கொடுக்தால் அதை எப்படி அவர் சமாளிக்க முடியும்? இதுவோ கிராமந்தாம், பட் டணமாக இருந்தால் கவலையில்லை. இங்கே பழைய சம்பிரதாயங்கள் வேரூன்றி இருக்கின்றனவே!....அதோடு சுற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/35&oldid=1671675" இலிருந்து மீள்விக்கப்பட்டது