28
அழகு மயக்கம்
சரோஜா: ஐயையோ! ரெயில் இன்றைக்குப் பார்த்துத்தான் இப்படி நேரங் கழித்து வரவேண்டுமா?
மருதாயி: இந்தக் காலத்தில் என்றைக்குத்தான் ரெயில் சரியாக வருகிறது ?
சரோஜா : இருட்டோடு இருட்டாக இந்த ஊரைவிட்டுப் போய்விட்டால் நல்லது. யார் கண்ணிலும் படக்கூடாது. அக்கா, நான் வந்ததைப்பற்றி நீங்கள் யாரிடத்திலும் சொல்லவேண்டாம்.
மருதாயி : (விசனத்தோடு) நான் யாரிடத்திலே சொல்லப் போகிறேன்?
சரோஜா: அவரிடத்திலே கூடச் சொல்லக்கூடாது. அவர் என்னை மறந்துவிட்டு சுகமாய் வாழவேணும்.
மருதாயி: நான் சொல்லமாட்டேன். ஆனால்...
சரோஜா : ஆனால் என்ன? அப்படியெல்லாம் பேசாதீர்கள். கொஞ்சகாலத்திலே எல்லாம் சரியாகிவிடும். காலம் போகப் போக எல்லாம் மறந்துபோகும்.
மருதாயி: இந்தச் சமயத்தில்கூட ஒரே ஒட்டமாக இடி ராமசாமியிடம் விஷயத்தைச் சொல்லி அந்தக் கல்யாணத்தைத் தடுத்துவிடலாம் என்று என் நெஞ்சு துடிக்கிறது.
சரோஜா : அக்கா, மறுபடியும் மறுபடியும் உங்களுக்கு இந்தச் சபலம் எதற்கு?
மருதாயி : எனக்கென்னவோ நாம் பிரியவே மாட்டோம் என்றுதான் தோன்றுகிறது.
சரோஜா: எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தானே தெரியப்போகிறது, பிறகு நீங்கள் எங்கே, நான் எங்கே? என்மேல் உள்ள் பிரியத்தினால் நீங்கள் என்ன என்னவோ கனவு காண்கிறீர்கள்.