உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழகு மயக்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அழகு மயக்கம்

சரோஜா: ஐயையோ! ரெயில் இன்றைக்குப் பார்த்துத்தான் இப்படி நேரங் கழித்து வரவேண்டுமா?

மருதாயி: இந்தக் காலத்தில் என்றைக்குத்தான் ரெயில் சரியாக வருகிறது ?

சரோஜா : இருட்டோடு இருட்டாக இந்த ஊரைவிட்டுப் போய்விட்டால் நல்லது. யார் கண்ணிலும் படக்கூடாது. அக்கா, நான் வந்ததைப்பற்றி நீங்கள் யாரிடத்திலும் சொல்லவேண்டாம்.

மருதாயி : (விசனத்தோடு) நான் யாரிடத்திலே சொல்லப் போகிறேன்?

சரோஜா: அவரிடத்திலே கூடச் சொல்லக்கூடாது. அவர் என்னை மறந்துவிட்டு சுகமாய் வாழவேணும்.

மருதாயி: நான் சொல்லமாட்டேன். ஆனால்...

சரோஜா : ஆனால் என்ன? அப்படியெல்லாம் பேசாதீர்கள். கொஞ்சகாலத்திலே எல்லாம் சரியாகிவிடும். காலம் போகப் போக எல்லாம் மறந்துபோகும்.

மருதாயி: இந்தச் சமயத்தில்கூட ஒரே ஒட்டமாக இடி ராமசாமியிடம் விஷயத்தைச் சொல்லி அந்தக் கல்யாணத்தைத் தடுத்துவிடலாம் என்று என் நெஞ்சு துடிக்கிறது.

சரோஜா : அக்கா, மறுபடியும் மறுபடியும் உங்களுக்கு இந்தச் சபலம் எதற்கு?

மருதாயி : எனக்கென்னவோ நாம் பிரியவே மாட்டோம் என்றுதான் தோன்றுகிறது.

சரோஜா: எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தானே தெரியப்போகிறது, பிறகு நீங்கள் எங்கே, நான் எங்கே? என்மேல் உள்ள் பிரியத்தினால் நீங்கள் என்ன என்னவோ கனவு காண்கிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/42&oldid=1659887" இலிருந்து மீள்விக்கப்பட்டது