பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



37

கண்ணாத்தா!'

'உன் மாப்பிள்ளை என்ன எழுதியிருக்கார்?"

இந்த மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்று எழுதியிருக்கிறார் அப்பா!' அதற்குமேல் அவளால் பேசமுடியுமா?

 

ண்ணாத்தாள் இப்போது கர்ப்பவதி. உண்மையான கர்ப்பவதிகூட அப்படி நடந்து கொள்ள முடியாது: அதை விட அதிகமாக கண்ணாத்தாள் உடலை அலட்டிக் கொண்டாள்.

மாமியார் வீட்டில் இப்போது கண்ணத்தாளுக்கு அளவு கடந்த மரியாதை. இட்லரிடம் இழந்த இடங்களே ஸ்டாலின் மீட்டுக் கொண்டதைப்போல் கண்ணாத்தாள் உற்சாகமாக இருந்தாள்.

 

ளைகாப்பு விழா வெகு விமரிசையாக் நடந்தது. கண்ணப்பன் பெண்ணேப்போல் வெட்கப்பட்டுக் கொண்டு யாரோடும் அதிகம் பேசாமலே நேரத்தைப் போக்கினான்.

கண்ணப்பன் தம்பி சொக்கநாதனும் வளைகாப்பிற்கு வந்திருந்தான். கண்ணப்பன், சொக்கநாதனைச் சந்தித்து இரண்டு வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. கண்ணப்பன், எர்ணாகுளத்திற்கு போவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சொக்கநாதன் விசாகத்திருநாளுக்கு ஊருக்கு வந்திருந்தபோது இருவரும் சந்தித்துக் கொண்டார்கள், அதற்குப் பிறகு கண்ணாத்தாளின் வளைகாப்பு விழாவில் தான் அவர்கள் சந்திப்பு ஏற்பட்டது.

சொக்கநாதன் கவர்ச்சியானவன். கண்ணப்பனை விடத் திடகாத்திரமானவன் சுருட்டை மயிர். ஆடிை உடுத்துவதிலும் அலங்காரம் செய்து கொள்வதிலும் சிறு பிள்ளேயிலிருந்தே சொக்கநாதனுக்கு அதிக நாட்டமுண்டு!

சுருட்டை மயிர் நன்றாகப் படியவேண்டும் என்பதற்காகத் தலைக்குக் கரடிக்கொழுப்புப் போட்டுக் கொள்வான், அன்று முழுதும் நறுமணம் வீசவேண்டும் என்று எண்ணி சட்டையில் 'அவினோலியா' சென்ட் தடவிக்கொள்வான். அடிக்கடி புதுச்செருப்பு மாற்றுவதும் அவனுக்கு வாடிக்கை, காகிதத்தகடு போன்ற் வாயல் வேஷ்டிகளே