பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

 இரண்டும் கெட்டவளாக வந்து விட்டதாக சசிக்கு நினைப்பு.

சில நேரங்களில் மனப்பூர்வமான ஆறுதல் மொழிகள் கூட வெறும் சடங்கு வார்த்தைகளாகி விடுகின்றன. கணவனை இழந்து கஷ்டப்படும் இளம் பெண்ணுக்கும் அவமானம் தாங்காமல் அலறித்துடிக்கும் பெரிய மனிதனுக்கும் ஆறுதல் சொல்லுதல் பிச்சைக்காரனுக்குச் செல்லாக் காசுகளை வழங்குவதைப் போலாகி விடுகிறது.

சசி நல்லவன். பண்பாளன். அவன் தகப்பன் மலையாளியானலும் தாய் தமிழச்சி என்பதால் அவனுக்கு கண்ணப்பனிடமும் கண்ணாத்தாளிடமும் தனி அன்பும் மரியாதையும் இருந்தது.

சுபத்ரா மூட்டிய தீ அவன் உள்ளத்தில் அணையாத நெருப்பாக ஜுவாலை விட்டு எரிந்தது.

டாக்டர் கொரியன் பரபரப்பாக இருந்தார். மெட்டர்னிட்டி வாா்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

மருத்துவமனைக்குள் நுழைந்த கண்ணப்பனுக்கு - ஏதோ ராஜகுடும்பத்தின் பிரசவம் நடப்பதுபோல் தோன்றியது. போனவுடன் அவன் டாக்டர் கெர்ரியனைச் சந்திக்க முடியவில்லை. அரை மணி நேரம் கழித்துத்தான் கொரியன் வார்டை விட்டு வெளியே வந்தான்.

"ஹல்லோ கண்ணப்பனா?’

"எஸ் டாக்டர்"

"நல்ல நேரத்தில் வந்து விட்டாய். உன் கடிதத்தைப் பார்த்தேன். உனக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். இன்றைக்கு அது நிறைவேறி விட்டது.*

"உண்மையாகவா ? குழந்தையை நான் பார்க்கலாமா? யாருடைய குழந்தை அது?"


"அதையெல்லாம் நீ.தெரிந்துகொள்ளக்கூடாது! தேவையுமில்லை! ஆனால் ஒன்று!நீ ஆண் குழந்தை கேட்டாய்!