பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15. விடை பெற்ற கண்ணீர்



கழுத்தில் காணோம் என்றதும் கடுகளவு நேரத்தில் கதிகலங்கிப் போனாள், ரேவதி.

மயில் பதக்கம் மட்டுமே அவளது விரல்களில் சிக்கியது. அவள் தேடியதைக் காணோம்.

திடீர் என்று நினைவு வர மேசையைப் பார்த்தாள்.

அவள் கழற்றிப் போட்ட திருமாங்கல்யம் பரிதாபமாகக் கிடந்தது.

மேசையை நோக்கி விரைந்தாள். கைகள் நடுங்க, மாங்கல்யத்தை எடுத்துக் கழுத்தில் போட்டுக் கொண்டே திரும்பி வந்தாள்.

“மிஸ்டர் ஞானசீலன், இனியாகிலும் என்னை உங்கள் ரேவதி ஞானசீலனாக ஏற்றுக்கிடுங்கள்’’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

அவன் உதாசீனமாக நின்றான்.

உணர்ச்சிவசப்பட்டவளாக ஞானசீலனின் கைகளைப்பற்றித் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டு, ஐயோ,தெய்வமே!’ என்று கூக்குரலிட்டு அழுதாள், அவள்!

தெய்வம் வெறும் கல்லாக, மரமாக, உலோகமாக இருப்பதுதானே இயற்கை!