பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


“சூ, மந்திரகாளி!... மிஸ்டர் எமதர்மராஜா ஏமாறக்கடவது!...”

“சாபமா?”

“நீங்களே கொஞ்சம் முந்தி உங்களுக்குச் சாபம் போட்டுக்கிட்டீங்களே அதுக்கு விமோசனம் செஞ்சேன்.”

“உங்கள் பேச்சும் பிரமாதம்.”

“உங்கள் பாராட்டு ஆத்மார்த்தமாக வத்தால், என் மகிழ்ச்சி உங்களுக்கு உரித்தாகுக!”

‘உங்கள் மகிழ்ச்சி எனக்கு உரித்தாகிட்டுதுங்க!’

நாணம் சிலிர்க்க, முறுவல் பூத்தாள், ரேவதி. “நினைப்பு வர்றப்ப ஒரு சின்ன உண்மையை நினைப்பூட்ட வேண்டியது என் பொறுப்பு. நான் பிரமாதமாக விவாதம் பண்றதாகச் சொன்னீங்க . நான் வாதாடினது நியாயத்துக்காகத்தானுங்களே? உங்களை மாதிரி இல்லீங்களே?”

“என்ன சொல்றீங்க, நீங்கள்?’’

“ஓர் அழகான பாசக் கனவு மாதிரி என் வயிற்றிலே வளர்ந்துக்கிணு இருந்த என் குழந்தையை - உங்கள் குழந்தையை - நம் குழந்தையை வெறும் கனவாக ஆக்கிய முதல் குற்றவாளியே நீங்கள்தான்! மோக வெறி உங்கள் கண்களை மறைக்க, வாயும் வயிறுமாக இருந்த, என்னை நெஞ்சிலே துளியத்தனை இரக்கம் இல்லாமல் எட்டித் தள்ளின. பாவத்துக்குக் கேவலம் வாய்ப் பரிகாரம் கூடத் தேடிக்கிடலையே நீங்கள்...” ஆறாத துயரத்தை. ரேவதியின் விழிகள் ஆற்ற முடியாமல் பேசின.

நீங்கள் மாத்திரம் என்னவாம்? மனிதாபிமானத்தைக்கூட மறந்தும் துறந்தும் என்னை-உங்களுக்கு ஒர் அமிர்தயோகம் வெள்ளிக்கிழமையிலே, நான் கொண்ட முதல் காதலின் பேராலே, நேசத்தோட மூணு முடிச்சுப்