இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
45
“நீங்கள் சொன்னால்தானுங்களே எனக்குத் தெரியும்?”
“என்னோட ஜாதகம் பற்றி உங்களிடம் எதற்குச் சொல்ல வேணும்? மறுபடியும் உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன்; டாக்டர் ரேவதியை மண்ணைக் கவ்வ வச்சி, அவளை வெல்லுவதற்கு இது நாள் வரை இந்தப் பாழாய்ப் போன மண்ணிலே யாருமே பிறக்கக் காணோம்! என் வரையிலும் இது வரை சத்தியமான உண்மை!”
“உண்மைதாங்க, டாக்டரம்மா.”
“சரி...சரி! எனக்கு நேரமாகிறது.”
ரேவதி வெளியே வந்தாள்.
காவற்காரப் பெரியவர் கை கூப்பி மரியாதை செலுத்தினார். ‘மாருதி’ தயார்.
திடீரென்று-
ரேவதி மாடிக்கு ஓடினாள்.
ஓடின கையோடு, ஊகூம் காலோடு திரும்பினாள்.
அப்போது-
அவளது அழகான இடுப்பிலே அழகான கைத்துப்பாக்கி ஒன்று அழகாக ஒளிந்து கொண்டிருந்தது!