56
"ஊம்!"
ரேவதி சிந்தனை வசப்பட்டாள்: "ஒரு வேளை, நான் தாலி கட்டிக் கொண்டிருக்கிறேனா இல்லையா என்கிற துப்பை அறிஞ்சுக்கிடவும் அந்த ஞானசீலன் இப்படியொரு மறைமுகமான நாடகத்தை நடத்தியிருக்கலாமோ?"
அவள் தவித்தாள்!
'மிஸ்டர் ஞானசீலன்! நீங்கள் எனக்கு இன்னும் எத்தனை பரீட்சை வைக்கப் போlங்களாம்?'-கண் முனைகள் கசிகின்றன.
"வா குழலி போகலாம்.’’
மாருதியின் குழல் ஒலி விரிட்டது.
'ரேவதி இல்லம்' உறக்கம் கலைந்தது.
விளக்குகள் ஒளி உமிழ்ந்தன.
ரேவதி உள்ளே நுழைந்து, பூந்தோட்டத்தைக் கடந்து, முகப்பு மண்டபத்தை அடைந்து, அகல விரிந்த வரவேற்புக் கூடத்தில் அவளது மெத்தை 'சோபா'வில் சாய்த்தாள்.
அப்போதுதான் அவளுக்கு மெய்யாகவே நல்ல மூச்சு வந்தது. அப்பொழுது அவள் மனமும், மானமும், மதிப்பும், மரியாதையும் அனுபவித்த ஆனந்தமான அமைதியும் அமைதியான ஆனந்தமும்கூட அவளுக்கு மிகவும் புதிய அனுபவம்தான்!
பின்தொடர்ந்து வந்த குழலியைக் கண்டவுடன், "வாம்மா...வா" என்று வரவேற்புப் படித்தாள். "இங்கே இனிமேல் உனக்குப் பிடித்தமான நாற்காலியில் நீ உட்கார்ந்து கொள்ளலாம்" என்றும் சலுகை வழங்கினாள்.
பத்து இருபது-அது நேரம்.