பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234


வெள்ளிப் பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகுதூரம்-இது
உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும்
ஒரு பாடம்!
(வெள்ளி)


பிள்ளை யெனும் பந்த பாசத்தைத் தள்ளிப்
பிரிந்தோடும்-தன்
உள்ளத்தை இரும்புப் பெட்டகமாக்கித்
தாள் போடும்!
இல்லாதவர் எவரான போதிலும்
எள்ளி நகையாடும்-இணை
இல்லாத அன்னை அன்புக்குக் கூட
சொல்லாமல் தடை போடும்
(வெள்ளி)


வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்
செல்வம் வரும் போகும்-இதை
எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்குத்
துன்பம் வரவாகும்!
கள்ள மில்லாத அன்புச் செல்வமே
என்றும் நிலையாகும்!
கஷ்டம் தீரும் கவலைகள் மாறும்
இன்பம் உருவாகும்!
(வெள்ளி)
சபாஷ் மாப்பிளே - 1961
இசை : K. V. மகாதேவன்