இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
258
- அடிக்கிற கைதான் அணைக்கும்
(வசனம்) ஏய்! பாடுடி!
- அடிக்கிற கைதான் அணைக்கும்!
- அணைக்கிற கைதான் அடிக்கும்!
- இனிக்கிற வாழ்வே கசக்கும்
- கசக்கிற வாழ்வே இனிக்கும்! -
(வசனம்) ம்! ஆடுடி (அடிக்கிற)
- புயலுக்குப்பின்னே அமைதி!
- வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி!
- இருளுக்குப் பின் வரும் ஜோதி!
- இதுதான் இயற்கை நியதி!
(வசனம்) பலே! (அடிக்கிற)
- இறைக்கிற ஊற்றே சுரக்கும்-இடி
- இடிக்கிற வானம் கொடுக்கும்!
- விதைக்கிற விதைதான் முளைக்கும்
- இதுதான் இயற்கை நியதி
(வசனம்) சபாஷ்! அஹஹ!
(அடிக்கிற)
வண்ணக்கிளி-1959
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: திருச்சி லோகநாதன்