பக்கம்:ஆசிய ஜோதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 ஆசிய ஜோதி இன்னும் தூங்காமல்.- வெளியில் இறங்கி வந்திடுவாய் அன்னை மாயை தரும்-இனிய அரசிளங் குமரா! ஓய்வு கண்டிடவே -எமைப்போல் ஓடிஓடி அலைவாய்; தாயும் தந்தையுமாய்-உலகைத் தாங்க வந்தோனே! உலகின் உண்மையை நீ--இன்னும் உணர்ந்திட வில்லை, அலகில் கருணையால்-உயிரை ஆள வந்தோனே! அன்பருக்காக-ஆசை அறுத்திட வேண்டும்; துன்பம் நீங்கிடவே - அரசும் துறந்திட வேண்டும். மாயப் பொய்மைகளைக் கண்டு மயங்கி டாதே, ஐயா! நேய மாகஉண்மை-நாங்கள் நிகழ்த்த வந்தோம், ஐயா! 17 19 20 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/37&oldid=1502291" இலிருந்து மீள்விக்கப்பட்டது