பக்கம்:ஆசிய ஜோதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருனை க் கடல் கொலை தவிர்த்தல் வேறு தீக்ஷிதரும் வானை விட்டெறிந்தார்-ஓமத் தீயெரி குண்டம் அழித்துவிட்டார்; மோக்ஷம் இவையுந் தருமோ என்றார் மூர்த்தியின் பாதம் பணிந்து நின்றார் செய்பிழை யாவும் பொறுத்தருள்வீர்"-எனச் சேவித்து மன்னனும் தாழ்ந்து நின்றான்; "ஐயனே நாட்டில் கொலை தவிர்த்து-நானை ஆணையும் கட்டுவேன் என்றுரைத்தாள். அரசன் கொலை தவிர்க்கக் கட்டளையிடல் வேறு "மன்னுயி ரெல்லாம் தன்னுயிர் போல நிலமுழு தாளும் நெடுமுடி யண்ணல் பிம்பிசாரப் பெரும்பெயர் வேந்தன், மெய்யகங் கண்டுஇவ் வையகம் உய்ந்திடத் திருவருள் புரிந்த செய்தி இதுவாம்; பாகசாலையில் பக்குவம் செய்தும் யாக சாலையில் எரிவாய் ஊட்டியும் பலவா முயிரின் குலம்வே ரறுத்தல் பழியும் பாவமும் பயக்கும் செயலாம். ஆதலின், ஊனை உண்பதும் உயிர்க்கொலை புரிவதும் இந்நாள் முதல்இத் நன்னாட் டெல்லையில் இல்லா தொழிக; ஈதுஎம் ஆணை! -அருளுடை யோர்க்கே அருளும் உறுதுணை யாமென்று உனங்கொள் வீரே.* 63 71 72 (5) (10) 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/64&oldid=1504307" இலிருந்து மீள்விக்கப்பட்டது