இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
128
ஆடரங்கு
அவள் கவனிக்கவில்லை. எழுந்த வேகத்தில் அவள் தலைச் சவுரி ஜன்னல் தாழ்ப்பாளிலேயே சிக்கி நின்றுவிட்டது.
சரஸ்வதிக்கும் சுயத் தலைமயிர் அதிகம் இல்லைதான். எலி வாலுக்கும் ஓரங்குலம் அதிகம் இருக்கலாம்.
இதை எல்லாம் கவனித்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் நரசிங்கன்பேட்டையில் இறங்கி நான் என் வழி நடந்தேன்.