பக்கம்:ஆடரங்கு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

ஆடரங்கு


"ஆமாம்; ஆனர்ஸ் கடைசி வருஷம் படிக்கிறேன்” என்றாள் அந்தப் பெண்.

"என்ன ஸப்ஜெக்ட்?”

"சரித்திரம்" என்று சுருக்கமாகவே பதில் அளித்தாள் மாணவி.

காலேஜில் படிக்கிற தேவிகளுக்கும் சினிமாவில் நடிக்கிற லக்ஷ்மிகளுக்கும் கடவுள் ஏன்தான் தனியாக, பிரத்தியேகமாக ஒரு பொய்க்குரல் அளித்திருக்கிறாரோ என்கிற தத்துவ விசாரத்தில் ஈடுபட்டேன் நான். தத்துவ விசாரத்துக்குத்தான் முடிவே கிடையாதே!

“உங்களுக்கெல்லாம் அதுக்குள்ளாகவே விடுமுறை ஆரம்பமாகிவிட்டதா?" என்று கேட்டார் நவரத்தின ஆசாமி.

காலேஜ் பெண் பதில் சொல்லுமுன் ரெயில் கொள்ளீடத் துப் பாலத்தில் ஓடத்தொடங்கியது. அந்தச் சப்தத்தில் பேச்சு சாத்தியமில்லை.

கொள்ளிடம் ஸ்டேஷனில் வண்டி நின்றதும் எங்கள் வண் டியிலிருந்து நாலைந்து பேர் இறங்கிவிட்டார்கள். இப்பொழுது வண்டியில் சற்றுச் சௌகரியமாக இடம் இருந்தது. எல்லோரும் நகர்ந்து உட்கார்ந்துகொண்டோம்.

கொள்ளிடத்தில் கால் மணி நின்றுவிட்டு ரெயில் கிளம்பியதும் அந்தக் காலேஜ் மாணவி அந்த நவரத்தின ஆசாமியின் கேள்விக்குப் பதில் சொன்னாள். "லீவு இன்னும் பதினைந்து நாள் இருக்கு. நான் இரண்டு நாள் லீவு எடுத்துண்டு தஞ்சாவூர் ரையில் போகிறேன்" என்றள்.

இதைச் சொல்விக்கொண்டே அவள் ஸீட்டில் சாய்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.

மிகவும் ரகசியமான குரலில் ராஜி சொன்னாள். "இத்தனை அலங்காரத்துக்கும் மேலே, காலிலே பாத ஸரம் போட்டிண்டிருக்காளே! அழகாத்தான் இருக்கு!” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/147&oldid=1527032" இலிருந்து மீள்விக்கப்பட்டது