146
ஆடரங்கு
ஆனால் ஒன்று நிச்சயமாயிற்று எனக்கு. அந்தக் காலேஜ் மாணவி லீலாவும் சமீபத்திய பத்திரிகைகளில் நாராயண செட்டியாரின் பெயரைப் பார்த்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாயிற்று. சற்று விரஸமான விஷயம். அதையும் கூடியவரையில் விரஸமாகவே பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. பத்திரிகைகள் பேரில் பிசகா என்ன? விரஸமான விஷயங்களை விரஸமான பாஷையில் படிக்க விரும்புகிறவர்கள்தாமே இன்று நம்மிடையே அதிகம் பேர் இருக்கிற மாதிரி இருக்கிறது!
ரெயில் ஆனதாண்டவபுரம் ஸ்டேஷனில் நிற்காமல் தாண்டிக்கொண் டிருக்கும்போது, அந்தப் பெண் லீலா தானாகவே நாராயண செட்டியாரிடம் சொன்னாள்! "எங்கப்பா பெயர் காப்டன் ஸ்ரீநிவாஸன்."
"அப்படியா ?" என்றார் நாராயண செட்டியார். பிறகு, "இந்த ரெயில் தஞ்சாவூருக்கு எத்தனை மணிக்குப் போகிறது". என்று கேட்டார்.
"ஒன்பதரைக்கெல்லாம் போய்விடும்" என்றேன் நான்.
இப்பொழுதெல்லாம் நீங்கள் அதிகம் எழுதுகிறதில்லை. போல் இருக்கே !" என்றார் நாராயண செட்டியார்.
"எங்கே எழுதுகிறது? தவிரவும் பத்திரிகைகளுக்குப் பல. தரப்பட்ட ரஸமான விஷயங்கள்தாம் கிடைத்துக்கொண்டே இருக்கின்றனவே!" என்றேன் நான்.
நான் இப்படிச் சொன்னது அந்தக் காலேஜ் மாணவிக்குப் பிடிக்கவில்லை என்பதை என் ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டேன். அவள் முகத்தைச் சுளித்துக்கொண்டாள்.
"நீங்கள் எது வரையில் போகிறீர்கள்?" என்று நாராயண செட்டியாரைக் கேட்டாள் லீலா.
"திருவாரூர் போகணும்" என்றார் நாராயண செட்டியார்.
"மாயவரத்தில் இறங்கிவிடறேளா?" என்றாள் லீலா. அவள் குரலில் ஏதோ கொஞ்சம் வருத்தம் தொனித்த மாதிரி பட்டது எனக்கு.