பக்கம்:ஆடரங்கு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாத ஸரம்

147


"நானும் திருவாரூர் வரையில்தான் போகிறேன்" என்றேன் நான்.

ரெயில் நீடூரில் நிற்காமல் தாண்டியது. "அடுத்தது மாயவரமா?" என்றர் நாராயண செட்டியார்.

"தஞ்சாவூருக்கு எப்பவாவது வந்தால் வீட்டுக்கு வாங்களேன் " என்று நாராயண செட்டியாரை லீலா அழைத்தாள்.

இந்தத் திடீர் அழைப்பு என்னைத் திடுக்கிடச் செய்தது. இதென்ன விபரீதமாக இருக்கிறதே என்று எண்ணினேன் நான். நாராயண செட்டியாரையும் கூடத்தான் திடுக்கிடச்செய்தது இந்த அழைப்பு என்று எனக்குத் தோன்றியது. திரும்பி என்னைப் பார்த்தார். பிறகு, லீலாவிடம், "அதற்கென்ன? தஞ்சாவூர் வந்தால் வருகிறேன் " என்றார்.

பேச்சை மேலே தொடர இஷ்டப்படாதவர் போல நாராயண செட்டியார் எழுந்து ஒரு டவலைக் கையில் எடுத்துக்கொண்டு முகம் கழுவிக்கொள்ளச் சென்றார். மாயவரம் ஜங்ஷனில் ரெயில் நின்ற பிறகுதான் அவர் வெளியே வந்தார்.

மாயவரத்தில் இறங்கித் திருவாரூர் ரெயிலைத் தேடிக்கொண்டு போகும்போது நான் ராஜியைக் கேட்டேன். பாதஸரம் என்ன? அநாகரிகமான நகையா ?"

"அநாகரிகம் என்று சொல்லவில்லை. மற்றதெல்லாம் நாஸுக்கும் நாகரிகமுமாக இருக்கச்சே, பாத ஸரத்தைப்பார்த்ததும் எனக்கு வேடிக்கையாக இருந்தது."

மாடிப்படிகள் ஏறத் தொடங்கும் வரையில் மௌனமாக இருந்துவிட்டு நான் சொன்னேன். "பாத ஈரம் என்பது ஒரு சின்னம். பெண்களைப் பூமியுடன் பிணைக்கும் ஒரு தத்துவம்" என்றேன்.

"அப்படி என்றால்......?"

“ரொம்ப ரொம்பப் படிக்கிற பெண்களுக்கு இறக்கை முளைத்துப் பறந்து போய்விடாமல் இருப்பதற்காக, அவர்களைப் பூமியுடன் பிணைக்கும், சங்கிலி இந்தப் பாத ஸரந்தான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/152&oldid=1527037" இலிருந்து மீள்விக்கப்பட்டது