20
ஆடரங்கு
" அது சரி. வலிக்காதா ? "
“ வலிக்கும், வலிக்கும். ஆனால் வலி தெரியாதிருக்கத்தான்......
"ஆப்பரேஷன் சரியாகப் போயிடும். குளோரபார மயக்கத்திலிருந்து வீழிச்சுக்கணுமே : விழிச்சுக்காமலே இருந்து விட்டேனானால்...... ! "
'போடி அசடே, அதெல்லாம் ஒன்றும் பயமில்லை.
" உங்களுக்கென்ன ? நான் போனா இன்னொருத்தியைப் பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கொண்டு விடுவீர்கள் ! "
" அசடு ! ”
" நான் சொல்றபடி எல்லாந்தான் கேட்கறதே இல்லை என்று ஆய்விட்டது. இன்னொருத்தி வந்தா அவள் சொல்ற படி கேட்டு ஆடுவீர்கள். என்னிடம் இப்போ போடற ‘டார்லிங் 'கை எல்லாம் அப்புறம் அவளிடம் போட ஆரம்பித்துவிடுவீர்கள். "
இதென்ன, இப்படி அசடாப் பேசறே?"
" நான் போனப்புறம் லக்ஷ்மி என்று ஒருத்தி இருந்தது. கூட உங்களுக்கு ஞாபகம் வராது ; இல்லையா ? நான் சொல்றது நிஜந்தானே ? ”
" இந்தா, பாரு. இந்த அசட்டுப் பேச்சை எல்லாம் விட்டு விட்டு......"
" உள்ளதைச் சொன்னால் அது அசட்டுப் பேச்சோ ? "
" என்ன உள்ளதைச் சொன்னே, உள்ளதை ? "
" பெட்டி நிறையப் புதுப் புடவை வைத்திருக்கிறேன். அதை அவள் எடுத்துக் கட்டிப்பாள். "