இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
படித்த பெண்
91
"உனக்கு மாமாவாகணும் அவன். வயசு முப்பதாகிறது. இன்னும் கல்யாணமாகவில்லை" என்றாள் சுந்தாப்பாட்டி.
"நான் கல்யாணமே..." என்று ஆரம்பித்த பத்மாஸனி. பாய், ஏதோ யோசனையில் ஆழ்ந்தவளாகப் பாதி வாக்கியத்தில் நிறுத்தினாள்.
நான் அவளைப் பார்த்தேன். எவ்வளவு படித்தவளாக இருந்தால்தான் என்ன? சுந்தாப்பாட்டியின் சூழ்ச்சியிலிருந்து. அப்படி ஒன்றும் சுலபமாகத் தப்பிவிட முடியாது என்று எனக்குத் தெரியும்.