இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
ஆடும்
ஆத்ம
சோதனை
என்னைச் சார்ந்த எல்லா விஷயங்களுமே, என்னிலிருந்து தொடங்க வேண்டுமென்று விரும்புபவன் நான். ஆனால் அதற்கு விதி விலக்காக, இந்தச் சேவையில்மட்டும் என்னுடைய சகோதரர்களையும், சகோதரிகளையும் பின்பற்றியிருக்கிறேன்.
மயக்கம் அடைந்த நிலையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லிக்கு மேலும் தொல்லை தரக்கூடாதென்று எண்ணி, இந்தப் பகுதியின் முடிவு வரை அவளது ஆத்ம சோதனையிலேயே என்னை ஈடுபடுத்தினேன். ஆனால் முடிவிலோ, என்னையும் மீறி அவளுக்குச் சுகுணாவின் மூலம் ஒரு பேரதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. அதற்கு நான் என்ன செய்வேன்?
“சிருஷ்டியின் முன் சிருஷ்டிகர்த்தன் சாமான்யமானவன்’ என்பது உண்மைதானே, என்னவோ...?
மா. கு. நெடுமாறன்