தீபம்
141
நீ ஆடிக் கொண்டிருக்கிறாயே, இந்த மாதிரி கேவலமான நாட்டியமல்ல அது!…”
சாத்தையன் நிலைமையை உத்தேசித்து, தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டான்.
“அல்லி, நீ என்னைப் புரிந்து கொள்ளவேயில்லை. அந்த இன்னாசியுடன் சேர்த்து, என்னையும் எடை போட்டு விட்டாய். அவன் வெறி பிடித்து, உன்னைச் சுற்றிக் கொண்டு வந்தான். நிஜமாகவே சொல்கிறேன்; உன்னைக் கல்யாணம் செய்து கொள்வதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன். இப்போதும் அப்படியேதான் நினைக்கிறேன்.”
“உன் எண்ணத்தில் ஒரு வண்டி சமுத்திர மணலை வாரிக் கொட்டி சமாதி வைத்து விடு. ஏனென்றால், அடுத்த வாரம் எனக்கும், வேறொருவருக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது.”
“யார் அவன் உன்னைக் கட்டிக் கொள்ளப் போகிறவன்? கண்ட துண்டமாக வெட்டிப் போடுவேன் கழுதைப் பயலை…!”
“உன் வீரமெல்லாம் எனக்குத் தெரியும். வயற்காட்டுக் கரம்பையில், கத்திக் காயம் பட்டு வாயைப் பிளந்து விழுந்ததை நானல்லவா, பார்த்தவள்!”
“அல்லி, நீ ரொம்பப் பேசி விட்டாய். என்னைப் பற்றி நீ தெரிந்தது ரொம்பக் குறைவு. இனி மேல், போகப் போகத் தெரியும் என் மகிமை!”
“தூ…!”
இதைக் கண்டதும், ஆவேசம் கொண்டவனப் போல, ‘அல்லீ’ என்று கதறிக் கொண்டே, அல்லியின் மீது பாய்ந்தான் சிங்கப்பூரான். அதே நேரத்தில் பலமான இரும்புக்