பக்கம்:ஆடும் தீபம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



150

ஆடும்


கேட்டபோதும், சினிமாக் கொட்டகையில் எதிர்பாராத விதமாக சாத்தையனைக் கண்டதுமட்டுமன்றி அவன் அருணாசலத்துக்கு சினேகிதன் என்று தெரியவந்த போதும், அருணாசலம் சந்தேகப்பட்டு அவளைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்ட போதும், சுகுணா என்று கையெழுத்திட்டிருந்த கடிதத்தைப் படித்த போதும், சூதாக காரில் அழைத்துச் செல்லப்பட்ட போதும், சாத்தையன் காரில் ஏறிய போதும்,அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளெல்லாம் சாதாரணமானவை என்று கருதும்படி செய்து விட்டது இன்னாசியின் வார்த்தைகளைக் கேட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி. அவன் பேசியதை அவள் காதுகள் கேட்டன. ஆனால் நம்ப மறுத்தன. அவள்முயற்சி செய்யவேண்டிய அவசியம் இல்லாமலே, ‘மேற்கொண்டு ‘எந்தச் சூழ்ச்சிக்கு இப்படிப் பேசு கிறாய்?’’ என்று அவள் வாய் வெடித்துக் கேட்டது.

இன்னாசி அதைப் பொருட்படுத்தவே இல்லை. நான் நிற்கிற இடத்திலிருந்து ஒரு எட்டுக்கூட அசையாமல் நிற்கிறேன். நீ போகும்போதுவெளிக் கதவைத் தாளிட்டுக்கொண்டு வேண்டுமானால் போய்விடு. அவன் குரலில் இருந்த அழுத்தம், உறுதி, அந்தரங்கம் அல்லியை அயர்த்தி விட்டன. இப்போது நம்புவதா, மறுப்பதா என்று இரண்டுங் கெட்ட நிலையில் அவதிப்பட்டாள். பட்டாமணியம் பாளையப்பத் தேவர் மகன் இன்னாசி, தூரத்திலிருந்து சீட்டியடித்து பிறகு ஊரில் தன்னைப் பற்றிவதந்தியைக்கிளப்பிய இன்னாசி-சாத்தையனுடன் வனக்காக கொலைக்கும் தயாரான் இன்னாசி இப்படிப் பேசுகிறான்! இது நம்ப வேண்டிய, எடுத்துக் கொள்ள வேண்டிய வார்த்தைதானா

ஒரு கணம் தயங்கினான் பிறகு அதனால் என்ன,சோதித்துத்தான் பார்ப்போமே என்றுகம்பியை அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/151&oldid=1337701" இலிருந்து மீள்விக்கப்பட்டது