உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஆடும்


மத்தியானம் கதவோரமாக அமர்ந்து, குப்பைக் கீரையை நறுக்கிக் கொண்டிருந்தாள் அல்லி. திண்ணைக் காலோரமாகச் செருமல் ஒன்று வெடித்து வந்தது. நிமிர்ந்து பார்த்தாள். கள் குடித்தவன் போலக் கண் சிவக்க, முகம் சிவக்க நின்று கொண்டிருந்தான் இன்னாசி.

“அல்லி, இனிமே நீ தப்பிக்க முடியாது. இன்னிக்கு ராத்திரி ஊர் சொக்கப்பனை கொளுத்திக்கிட்டிருக்கிற போது, நான் உன்னை அடைஞ்சே தீருவேன். நீ கழுதையாக் கத்தினாலும் விட மாட்டேன். ஜோராச் சிங்காரிச்சுக் கிட்டுக் காத்திருக்கணும்.”

பதிலிறுக்க அவள் வாய் துடிதுடித்தது. கேட்பதற்குத்தான் ஆள் இல்லை. அவன் போய் விட்டானே!

மனத்தில் கண்ட வெடிப்புக்களிலிருந்து பாய்ந்த நீர், கண்களில் வழிந்தது. அந்த நீர்க் கோலத்திலே, என்றோ இறந்து போன தாயின் முகம் தெரிந்தது.

“அம்மா உன் பொண்ணைப் பார்த்தாயா அம்மா? அன்னிக்கு உன்னிடம் சொன்னேனே, ‘ஆயிரம் காலிப் பயல்களுக்கு மத்தியிலே கூட, உன் பொண்ணு புடம் போட்ட தங்கமா நின்னு ஜொலிப்பா’ன்னு? ஒரே ஒரு காலிப் பயலுக்கிட்டேயிருந்து கூட என்னாலே தப்பிக்க முடியாது போலிருக்கே!” என்று அலறினாள்.

ஏன் தப்பிக்க முடியாது? இன்று வரை தப்பிக்கவில்லையா? காலிப் பயல்களிடமிருந்து தப்பித்து விடலாம். உயிர் காவலாக நிற்கும் வரை, கற்புக்குப் பங்கம் ஏற்படக் காரணம் இல்லை. ஆனால், அபவாதத்திலிருந்து தப்பிக்க முடிந்ததா? முடியவில்லை. அதற்குக் காவல் இல்லை.

இதிலிருந்தும் தப்பித்து விட்டால்… …?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/25&oldid=1682506" இலிருந்து மீள்விக்கப்பட்டது