பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

139

என்பதை இடித்துக் கூற விரும்புகிறான், அவனுடைய தம்பி விபீஷணன். எல்லாம் வல்ல இறைவனையே 'தூ' என்று தள்ளி தன்னிச்சையோடு உலகாண்டவீரன் இரண்யன் அழிந்த வரலாற்றை சாங்கோபாங்கமாக எடுத்துரைக்கிறான். இரணியன் உலகளந்த உத்தமனாகிய பூரீமன் நாராயணனை எவ்வளவுக் கெவ்வளவு வெறுத்தானோ, அவ்வளவுக் அவ்வளவு போற்றுகிறான் அவன். மகன் பிரஹலாதன். தந்தைக்கும் மகனுக்கும் வாதம்.

பள்ளிக்கூடம் ஆனாலும் சரி வேறே எங்கேயானாலும் சரி, 'இரண்யாய நம:' என்றே குட்டுப் போட வேண்டுமென்கிறான் இரணியன். இல்லை "ஓம் நமோ நாராயணாய, என்று தான் ஆரம்பிப்பேன் என்கிறான் பிரஹலாதன் தான் கெட்டதும் அல்லாமல் ஊராரையு மல்லவா கெடுக்கிறான் மகன் என்று எண்ணுகிறான் தந்தை.

பெற்ற மகனை ஜன்ம விரோதியாகவே பாவித்து என்ன என்ன வெல்லாமோ செய்து கொல்லப் பார்க்கிறான். அத்தனைக்கும் தப்பித்து விடுகிறான் பிரஹலாதன். அதன் பின்னும் தந்தை முன் கம்பீரமாகத் தன் சித்தாந்தத்தை நிலை நாட்ட வீறுகொண்டெழுகிறான் இருவருக்கும் வாதம் முற்றுகிறது. "நீ போற்றும் ஹரி எங்கிருக்கிறான? இங்கிருப்பானா? அங்கிருப்பானா? என்றெல்லாம் கேட்டு உறுமுகிறான் இரணியன். "அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் தொட்டஇடமெல்லாம் தோன்றுவான் அவன்" என்றே முறைக்கிறான் மகன்.

சாணினும் உளன், ஓர்த்தன்மை
அணுவினைச் சத கூறிட்ட
கோணினும் உளன், மாமேருக்
குன்றினும் உளன், இந்நின்ற