பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

தூணினும் உளான், நீ சொன்ன
சொல்லினும் உனன், இத்தன்மை
காணூதி விரைவில் என்றான்
நன்றெனக் கனகன் சொன்னான்.

தூணையே எற்றுகிறான் இரணியன். பிளந்த தூணி லிருந்து புறப்படுகிறான் நரசிம்மன்.எப்படிப் புறப் படுகிறான்? அது நம்மால் சொல்லத் தரமன்று. கம்பர் தான் சொல்ல வேண்டும்.

நசை திறந்து, இலங்கப் பொங்கி
நன்று நன்று! என்ன நக்கு
விசை திறந்து உருமிவீர்ந்தது
என்னவே தூணில் வென்றி
இசைதிறந்து உயர்ந்த கையால்
எற்றினன், எற்றலோடும்
திசைதிறந்து அண்டம் கீறி
சிரித்தது செங்கண் சீயம்

என்று பாடுகிறார் கம்பர். என்ன பயங்கரமான சிரிப்பு. ஆனால் இந்தச் சிரிப்புக்கு இரணியன் பயந்தானா? "ஆரடா! சிரித்தாய்! போரடா பொருதியாயின் புறப்படு புறப்படு என்று தானே சிரித்துக் கொண்டு ஆரவாரிக்கிறான். இது மட்டுமா? இந்த ஹரியை வணங்கி வாழும் தன் மகன் பிரஹலாதனைப் பார்த்தும்

கேளிது! நீயும் காண
கிளர்ந்த கோளரியின் கேழில்
தாளொடு தோளும் நீக்கி
உன்னையும் துணித்துப் பின் என்
வாளினைத் தொழுவதெல்லால்
வணங்குதல் மகளிர் ஊடல்