பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

53

அந்தச் சமயத்தில் வருகிறான் ஒரு வேதியன். அனுமன் அருச்சனன் இருவரையும் பார்த்து - அவர்கள் நடத்திய போட்டி விவரங்களைக் கேட்கிறான். 'என்ன! போட்டி என்றால் மத்தியஸ்தர் ஒருவரை வைத்துக் கொள்ளாமலா போட்டி போடுவது. சரி. நான் மத்தியஸ்தனாக இருக் கிறேன், திரும்பவும் அருச்சனன் பாலம் அமைக்கட்டும்' என்கிறான்.

அருச்சுனனும் பாலம் அமைக்கிறான், அம்புகளா லேயே திரும்பவும். அனுமனும் தன் விசுவ ரூபத்துடனே பாலத்தின் பேரில் குதிக்கிறான்; ஓங்கி மிதிக்கிறான். இந்தத் தடவை பாலம் நொறுங்கவில்லை. அசையாது நிற்கிறது. அனுமன் தலைகவிழ்கிறான். அந்சத் சமயத்தில் வேதிய னாக வந்து மத்தியஸ்தம் பண்ணியவன், 'நானே ராமன்' என்று தன் உருவைக் காட்டுகிறான். அதே நேரத்தில் அருச்சுனனுக்கும் 'நானே கிருஷ்ணன்' என்றுக் காட்டி விடுகிறான். 'எல்லாம் நானே' என்னும் கீதோபதேசம் அன்றே நடந்துவிடுகிறது இருவருக்கும். கடைசியில் அருச்சுனன் வேண்டிக் கொண்டபடி அனுமனும் பாரத யுத்தம் நடக்கும் போது அவனுடைய தேரில் கொடியாக அமைந்து, வெற்றி பெற உதவுவதாக வாக்களித்து விடுகிறான். திரும்பவும் விரிவாக நடக்கிறது கீதோபதேசம்.

போர்க்களத்தில் குறையாத வீரமும், அசையாத பக்தியும் உடைய அனுமனுமே கேட்கிறான் கீதோப தேசத்தை - அறிதற்கரிய விளக்கங்களை எல்லாம் பெறுகிறான். வீரத்திற்கும், பக்திக்கும் தலை சிறந்த எடுத்துக்காட்டு அனுமன். ஆதலால்தான், ராமாயண பாத்திரங்களிலே தலை சிறந்த ஒரு பாத்திரமாக அனுமன் அமைகிறான்.

"எவனிடம் உன்னிடம் இருப்பது போல் ஞாபகசக்தி, மனத்தெம்போடு கூடிய தைரியம், சிறந்த மதி நலம்,