பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

சேனாபதித் திருக்கோலத்திலே பார்க்கிறோம். இத்துடன் சிறந்த அறிஞனாகவும் இருக்கிறான். ஞானப் பழமாகவே அன்னைக்கும், ஞான குருவாகவே தந்தைக்கும் அமைந்தவன் என்றல்லவா அவனைப் பற்றிய கதைகள் கூறுகின்றன.

அன்றொரு நாள் காலையிலே, அன்னை பார்வதியும் அத்தன் பரமசிவனும் அமர்ந்திருக்கிறார்கள் கயிலை மலையிலே. அங்கு வந்து சேருகிறார் நாரதர். அவர் சும்மா வரவில்லை, கையில் ஒரு மாங்கனியையும் கொண்டு வருகிறார். அதை ஐயனிடம் கொடுத்து அவன்றன் ஆசி பெறுகிறார். அவனுக்குத் தெரியும் இவர் செய்யும் விஷமம்.

அந்த விஷமத்திலிருந்து தானே பிறக்க வேண்டும் ஓர் அற்புத உண்மை. நாரதர் தந்த கனியைச் சிவபெருமான் அன்னை பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதிக்கு ஒர் ஆசை. மக்கள் இருவரையும் அழைத்து எல்லோரும் சேர்ந்து உண்ணலாமே என்று. மக்களும், ஆம் விநாயகரும் முருகனும் தான், வந்து சேருகின்றனர்.

இதற்குள் சிவபெருமான் நினைக்கிறார், இந்தக் கனிமூலம் ஒரு போட்டிப் பரீகூைடியே நடத்தலாமே' என்று. 'உங்களுக்குள் ஒரு பந்தயம். யார் இந்த உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இக்கனி' என்கிறார் சிவபெருமான்.

இந்தப் போட்டியில் தனக்குத் தான் வெற்றி என்று மார் தட்டிக்கொண்டு மயில் வாகனத்தில் ஏறி ககன வீதியிலே புறப்பட்டு விடுகிறான் முருகன். விநாயகருக்கோ, தம் மூஷிக வாகனத்தில் ஏறிக் கொண்டு தம்பியுடன் போட்டிபோட முடியாதுதான். ஆனால், அவர் சாவதான