பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 257 குழுக்கள் அமைக்கப்பெற்றிருந்தன. என்னைக் கேட்காமலே அதிகாரிகள் அந்தக் குழுக்களில் உறுப்பினராக்கி இருந் தார்கள். தான் குடும்பச் சூழ்நிலையில் அமைதியாக இருக்க நினைக்கிறேன் என்று கூறி வேண்டியும் அவர்கள் விட வில்லை. அவர்தம் விருப்பப்படி அவற்றின் உறுப்பினனாக இருந்து செயலாற்றினேன். - செங்கற்பட்டு மாவட்டம் முழுதும்-சிறப்பாகக் காஞ்சி வட்ட ஊர்கள் அனைத்திலும் நான் சென்று சொற்பொழி வாற்றினேன். உலகப்போரின் நிலை பற்றியும் அதில் நம்நாடு கலந்துகொள்ள வேண்டிய தேவை நேர்ந்தமை பற்றியும் நம் நாட்டு மக்கள் பொன்னாலும் பொருளாலும் மக்களாலும் பிற தியாகங்களாலும் எவ்வெவ்வாறு உதவ வேண்டும் என்பது பற்றியும் விளக்கமாகப் பேசினேன். ஒவ்வொரு ஊரிலும் எண்ணற்ற மக்கள் அப்பேச்சுக்களைக் கேட்டு உதவ முன்வந்தனர். அக்காலத்தில் காஞ்சியில் துவாரகா நாத ஐயர் என்பவர் தாசில் தாராக இருந்தார் என எண்ணுகிறேன். இன்னும் பல அதிகாரிகளும் நல்ல தொண்டு ஆற்றினர். எப்போதும் என்னை அவர்கள் தங்கள் காரிலேயே எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள். நானும் இந்த ஈடுபாடுகளினால் ஒரளவு குடும்பச் சூழ்நிலையை எண்ணி எண்ணி ஏங்க நேரமில்லா வகையில் அமைதியாக வாழ்ந்து வந்தேன். - ஒரு காலத்தில் சென்னை மாநிலத்தின் போர் உதவிக் குழுவின் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டம் பெரும் அளவில் கிண்டிக் குதிரைப் பந்தய மைதா னத்தில் நடைபெற்றது. மாநில ஆட்சித் தலைவர் கவர்னர் தலைமை வகித்தார். பலர் பங்குகொண்டனர். நானும் அதில் பேச வேண்டி இருந்தது. காஞ்சிபுரம் தாசில்தார் உட்பட பல அதிகாரிகளும் நானும் இன்னும் சில முக்கிய ஆ-17