பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 259 உரிமையோடு அவர்கள் அழைப்பார்கள். அவர்தம் அழைப்பைக் கேட்டு வெளியில் வந்தேன். நாற்காலியில் உட்கார்ந்தோம். அவர் என்பெயர் 'இராவ்சாகிப் பட்டத் துக்கு சிபார்சு செய்யப்பெற்றுள்ளது என்றும் காஞ்சிபுரம் வட்டத்துக்கு இவ்வொரு பெயர்தான் என்றும் கூறிவிட்டு என்னை வாழ்த்திச் சென்றார். என் பதிலைக்கூட அவர் எதிர்பார்க்கவில்லை. அவர், நான் மறுப்பேன் என்று எண்ணியிருக்கக்கூடும். அக்காலத்தில் உண்டான பல போர் பற்றிய அரசாங்கப் பதவிகளை நான் வேண்டாம் என ஒதுக்கியதை அவர் அறிவார். எனவே அவர் விரைந்து சென்றுவிட்டார். நான் அன்றுமட்டுமன்று-இன்றுவரை எனக்குப் பலர் பட்டம் பதவி அளிக்க வருவதை வேண்டாம் என ஒதுக்கியே வந்துள்ளேன். அப்படியும் இரண்டொரு நண்பர்கள்--தட்டமுடியாத நிலைமையில் எனக்கு அளித்த பட்டங்களை நான் சூட்டிக்கொள்வதுமில்லை. அதே பட்டங் களைச் சிலர் தம் பெயர்த்தாளில் (Lettet head) பொறித்து வைத்துப் பாராட்டுவதைக் காட்டி, அன்பர்கள் என்னையும் அதுபோல் செய்யச் சொல்வர். எனினும் எனது படிப்பு, பணி பற்றி அமைந்த பட்டங்களைத் தவிர்த்து நான் வேறு எதையும் இட்டுக்கொள்வதில்லை, பிற்காலத்தில் அவற்றை யும் விட்டுவிட்டுப் பெயரளவிலேயே நிற்கிறேன். இந்த நிலையில் அன்று நான் எப்படி 'இராவ் சாகிப், பட்டத்தை ஏற்றுக்கொள்வேன்? நாட்டுக்குப் பணியாற்றும் கடமைக்காக-உலக அமைதிக்குப் பாடுபடும் கடமைக்காக நான் அன்று பணிபுரிந்தேனே யன்றிப் பட்டம் பதவிக்காக அன்று. நான் விரும்பி இருந்தால் அன்று அரசாங்கத்தில் உயர்ந்த பதவிபெற்றிருப்பேன். இன்று தலைமைச் செயலகத் திலோ வேறு அரசாங்க இடத்திலோ உயர்ந்த பதவியில் இருந்திருப்பேன். ஆயினும் என் மனம் அவற்றிலெல்லாம் நாட்டம் கொள்ளவில்லை, அமைதியையே நாடிற்று. ஆகவே