பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஆனந்த முதல் ஆனந்த வரை. ஒன்றும் புரியவில்லை. அந்தச் சத்தம் என்னவென்று கேட் கிறீர்களா? வேறொன்றுமில்லை. அவர் ஓங்கி என் கன்னத்தில் அடித்த அடியின் எதிரொலிதான் அது. அனை வரும் திகைக்க, நான் அப்படியே என் கன்னத்தைப் பிடித்துக் கொண்டேன்; அழுகை வந்தது: தேம்பித் தேம்பி அழுதேன் ஆனால் அவர் கோபம் தணிந்தவராகக் காணோம். வகுப்பில் அழவேண்டாம் என எச்சரித்தார். எனக்கு அவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. அழுவதைத் தவிர வேறொன்றும் முடியவில்லை. அந்த வேளையில் அவர் என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார். நான் அழுது கொண்டே வாயில்படியில் நின்றிருந்தேன். என்றாலும் என் நிலை என்னிடம் இல்லை என உணர்ந்தேன். எத்தனை நேரம் நின்றிருந்தேனோ, எனக்கே இன்றும் புரியவில்லை. மணி ஒலி கேட்டது. வகுப்பு விடும் சமயம். போகும் எல்லா வகுப்பு ஆசிரியர்களும் என்னிடம் இரக்கம் காட்டுவது போன்று பார்த்துக் கொண்டே சென்றார்கள். எப்படியோ அந்த இளமையிலும் அவமானம் என்னை வந்து பற்றிக் கொண்டது. அந்த வெய்யில் வேளையில் வகுப்பறைக்குச் சென்று என் பாடப் புத்தகங்களையும் எடுத்துக் கொள்ளாமல் நேரே வீட்டுக்குப் புறப்பட்டு விட்டேன். - நல்ல வெய்யில் வேளை. பகல் ஒரு மணி. நான் வீங்கிய கன்னத்தோடு வீடு வந்து சேர்ந்தேன். என்னை அந்த வேளை யில் அன்னையும் பாட்டியும் எதிர்பார்க்கவில்லை. என் முகம் கலங்கி இருந்தது. கன்னம் வீங்கி இருந்தது. இருவரும் ‘என்ன, என்ன? என்று கேட்டார்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒ' என்று கதறினேன். என் தாயார் என்னை நையப்புடைத்து நல்வழியில் திருத்த முயல்பவர்கள் தாம். ஆயினும் மற்றொருவர், ஆசிரியர் ஆயினும் என்னை அடித்தால் பொறுக்கமாட்டார்கள். என் முகத்தைத் துடைத்து, அழைத்துச் சென்று உணவு ஊட்டினார்கள். அப்படியே உண்டு உறங்கிவிட்டேன்.