பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 உலகவரலாற்றில் சூரியன் என்றும் மறையாத பேரரசா பிருந்த ஓர் அரசு, இன்று அனைத்தையும் துறந்து-மறந்து எங்கோ தன்னளவில் சுருங்கி வாழ்வதை அறிவோம். அப்படியே பெரும்கரடி என உலகையே அஞ்சவைத்த ஒரு பேரரசு இன்று சிதறுண்டு, பலவாகப் பிரிந்து, பாழ்பட்டு நிற்ப தையும் காண்கின்றோம். அப்படியே தனி மனிதர்களிலேயும் இரணியன், இராவணன் காலந்தொடங்கி இன்றுவரை நாடு தொறும் நெடிதுவாழ்ந்து நிலைகெட்ட மனிதர்களையும் காண்கின்றோம். இந்த நிலையில் நான் என் அனுபவத்தில் கண்ட பல உண்மைகளை-என் வாழ்வின் நிகழ்ச்சிகளை எண்ணி எண்ணிப் பார்த்தேன். என் வாழ்நாளின் உலக நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்ப்பதுண்டு. என் இளமைக் காலம் தொட்டு, சுமார் எண்பது ஆண்டுகளை நீடுநினைந்த நாட்கள் பல. அந்த நினைவு அலைகளில் அவ்வப்போது எண்ணி எழுதிய என் வாழ்வு பற்றிய கட்டுரைகள் அடங்கியதே இந்த நூலாகும்-நான் பிறந்த ஆனந்த ஆண்டு முதல்-அடுத்த ஆனந்த வரை-அறுபது ஆண்டுகள் வரை என் எண்ணத் தெழுந்த என் வாழ்வின் ஒருசில குறிப்புகளே இங்கே எழுதப்பெற்றன. எழுத வேண்டியவை மிகமிகப் பல இதில் முதல் பகுதியாக உள்ள இளமையின் நினைவுகள் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், உதகை உச்சியில் இருந்து எழுதப் பெற்றதாகும். காஞ்சி வாழ்க்கை', பின் சில ஆண்டு களில் குற்றாலத்திலிருந்து எழுதியதாயினும் எழுதிச் சில ஆண்டுகள் கழித்தே வெளிவந்தது. இவைபற்றியெல்லாம் அவ்வவற்றின் முன்னுரைகளில் குறித்துள்ளேன். மூன்றாம் பகுதியே இப்பொழுது எழுதப்பெற்றது. இந் நிகழ்ச்சிகளை யும் சேர்த்து அறுபது ஆண்டுகள் வாழ்வின் சிறுகுறிப்பினைக் கொண்டதால்,இந்நூலுக்கு இப்பெயரிட்டேன். இன்று நான் எண்பதைத் தொட்டுக் கொண்டிருக் கின்றேன். எனவே அடுத்த இருபது ஆண்டுகள் நிகழ்ச்சி