பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ) ஆரணிய காண்ட ஆய்வு

உரையாடல்

இராமன்: நீ அந்தணர் குலம்: யான் அரசர் குலம்; அதனால் யான் உன்னை மணத்தல் தகாது.

அரக்கி: யான் அந்தணனுக்கு அரக்கி வயிற்றில் பிறந்ததால் யான் அந்தணர் குலத்தவள் அல்லள்.

இராமன்: அங்ஙனம் எனில், யான் மக்கள் குலத்தவன்; நீ அரக்கர் குலத்தவள்; மக்களும் அரக்கரும் மணக்க இயலாது.

அரக்கி: யான் தவம் செய்து அரக்க உருவை மாற்றி மக்கள் குலத்தவளாகி விட்டேன்.

இராமன் சரி, உன் அண்ணன்மார்களாகிய குபேரனும் இரவணனும் வந்து உன்னை எனக்கு மணம் முடித்து வைக்க வேண்டும்.

அரக்கி = களவு மணம் (காந்தருவ விவாகம்) என ஒன்று உள்ளதே. அதன்படி எவரும் அறியாமல் நாம் உறவு கொள்ளலாம். இவ்வாறு நாம் உறவு கொண்டபின் என்னைச் சேர்ந்தவர்கள், மண்ணுலகோடு விண்ணுலகிற்கும் உன்னை அரசனாக்கி உனக்கு ஏவல் செய்வர்.

இராமன்: இவ்வாறு நடக்கப்பெறின், அரக்கர் அருளையும் நின் அழகையும் பெரிய அரசச் செல்வத்தையும் பெற்றவனாவேன். நான் அயோத்தியை விட்டு வந்து காட்டில் பத்து ஆண்டுகள் செய்த தவம் நன்கு பயன் தந்து விட்டது என்று கூறி, வெளியில் பற்கள் விளங்கும்படி உரக்கச் சிரித்தான்.

"கிருதர்தம் அருளும் பெற்றேன்

கின்னலம் பெற்றேன் கின்னோடு செல்வத்து யாண்டும் உறையவும்

ஒருவரும் பெற்றேன் ஒன்றோ