பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் ஒரு மந்திரிக்கும் அவர் தோழர்களுக்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால் அம்மந்திரி ராஜிநாமாச் செய்துவிட வேண்டும். மந்திரி சபை நிர்வாக முறையில் காணும் விசேஷங்கள் பின்வருமாறு :- - o (1) ஒற்றுமை-ஜனப் பிரதிநிதி ஆட்சியில் மந்திரிசபை முறையில் மாத்திரமே நிர்வாக அங்கத்தினருக்கும் சட்ட சபைக்கும் பூரண ஒற்றுமையும் ஒத்துழைப்பும் ஏற்படுகின் - றன. அதிகாரப் பிரிவினைக் கொள்கைக்கு மந்திரிசபை ஆதரவு அளிக்காமல், அதிகாரங்களைக் ஆஐ குவித்து ஓரிடத்தில் பொறுப்பு ஏற்றுவதே அம்கிகள் இங்கிர்வாக முறையின் முக்கிய அம்சம். . . . . . பிரிட்டனில் பண சம்பங்தமான மசோதாக் களைச் சட்டசபையில் கொண்டுவரும் உரிமை மந்திரி சபைக்கு மாத்திரமே உண்டு. ஆதலின், ஆதிமுதல் கடைசி வரையில், சட்டம் இயற்றிப் பணம் அளிக்கும் அதிகார ஸ்தாபனத்திற்கும் சட்டத்தை கிறைவேற்றிப் பணத்தைச் செலவழிக்கும் கிர்வாக ஸ்தாபனத்திற்கும் இத்துழைப்பு அதிகம் இருக்கும். முரண்பாடுகளும் முட்டுக்கட்டைகளும் நேர்வது துர்லபம். - . . . . (8) பொறுப்பு -தன் நிர்வாகக் கொள்கைக்கும் காரியக் கிரமத்திற்கும் சட்டசபையில் பெரும்பான்மையோரின் ஆதரவு இல்லாவிடின் மந்திரி சபை ராஜிநாமாச் செய்துவிட வேண்டும்; இன்றேல் சட்டசபையைக் கலைத்துப் புதிய தேர்தலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இந்த நியதி இருத் தலினல் சர்க்கார் எப்பொழுதும் ஜனங்களுக்குக் கீழ்ப்பட் டுள்ளதாகவே இருக்கும். வாக்காளர்களின் அபிப்பிராயத் திற்கு விரோதமாக யாதொரு கொள்கையும் நடவடிக்கை யும் நீடித்து நடைபெறுவது முடியாத காரியம். ஆகையால் மந்திரி சபை ஆட்சி பொறுப்பாட்சியாகும். (8) வளைந்து கொடுக்கும் தன்மை (அரசியல் சமாதான முறையில் நடைபெறுதல்) -சட்டசபையில் அரசாங்கக் கட்சி தோல்வியடைந்தால் எதிர்க் கட்சித் தலைவர் பிரதம 70