፲፮) ஆராய்ச்சிக் கட்டுரைகள்
டக்டர் சாமிஞத ஐயர் சதாபிஷேக மலர்
கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலர்
பண்டிதமணி மணி மலர்
மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன் விழா மலர்
, மேலைச்சிவபுரி சன்மார்க்க சபைப் பொ ன்
விழா மலர்
புதுவைக் கல்விக் கழகக் கட்டுரை
மகாவித்துவான் மே. வீ. வே. மணிவிழா
է Դ6t}քր
இம்மலர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, கட்டுரைக் கலே வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த சில அரிய இலக்கிய இதழ்கள் பற்றியேனும் நன்றியோடு குறிப்பிட வேண்டும். அவையாவன :
1. செந்தமிழ் .ே கலா நிலையம் 3. லோகோபகாரி 4. ஆனந்தபோதினி .ே குமரன்
கட்டுரைக்கலையின் வரலாறு பற்றியே பெரிதும் இக் கட்டுரையில் இதுவரை கருதி வந்துள்ளோம். எனினும் கட்டுரைப் பண்பு பற்றி ஒருசிறு குறிப்பேனும் ஈண்டு பொறித்தல் தகும். கட்டுரை எழுதுவது எப்படி என்னும் தலைப்பில் அறிஞர்கள் அவ்வப்போது கட்டுரைகள் வரைந்துள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை திரு. இராஜாஜி, பேராசிரியர் துரை அரங்களுர் போன்றவர் கள் எழுதியுள்ளனவாகும். இக்கட்டுரைகட்கு எல்லாம் பெரும்பகுதி அடிப்படையாய் விளங்குவது பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி முனிவர் நன்னூல் பொதுப்பாயி