பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


சமற்கிருதச் சொல் என்று நினைத்துக்கொண்டு), கல்வி மந்திரி என்று எழுதியது ஆரியப் பார்ப்பனக் குறும்பு! (மந்திரி என்பது தூயதமிழ்ச் சொல்லே என்னும் ஆராய்ச்சிக்கு நாம் இப்பொழுது போக விரும்பவில்லை.)

4 ‘ஜூன்’ என்பதைத் தமிழ் இலக்கணப்படி, ‘சூன்’ என்று எழுதுதல் வேண்டும். தமிழ் என்பதை ஆங்கிலத்தில் ‘TAMI–ழ்’ என்று எழுதாமல் TAMIL அம்மொழி மரபுக்கேற்ப எழுதுவது போல், ஜூன் என்பதையும் ‘சூன்’ என்றே தமிழ் மரபுக்கேற்ப எழுதுதல் வேண்டும். (ஆனால் நம் இனக் கோடரிக் காம்புகளும், வீடண முண்டங்களும் நடத்தும் இதழ்களிலேயே இவ்வாறு எழுதப் பெறும்பொழுது, சிவராம ‘அய்யர்கள்’ சும்மா விடுவார்களா? இல்லாது போனால் அவர்கள் மேனியில் புரளும் பூணூலுக்குள்ள பெருமைதான் என்ன?

5. அடுத்தது, விஞ்ஞானம் என்னும் சொல் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தூக்கியெறியப்பட்ட சொல். ‘அறிவியல்’ என்பதை ஐந்தாம் வகுப்பு மாணவனும் படித்து வருகிறான். அப்படியிருக்க அறிவியலை ‘விஞ்ஞானம்’ என்று வேண்டுமென்றே எழுதுவது நீரை ‘ஜலம்’ என்று விடாப் பிடியாய் எழுதிக்கொண்டிருப்பது போலும் சிவராமக் குறும்பே!

6. போதிக்கும் என்ற சொல் போய், பயிற்றுவிக்கும் என்னும் தூய தமிழ்ச்சொல் புழக்கத்திற்கு வந்து, எல்லாராலும் கையாளப் பெற்று வரும்பொழுது, இந்தச் சிவராம அய்யருக்கு மட்டும் என்ன வந்தது? (அந்த ஆளைச் சொல்லி மட்டும் குற்றம் தீர்ந்து போகாது. நம் ஆதித்தன்களும், கண்ணதாசன்களும், ‘விடுதலை’ ‘வீரமணி’களும், பொதுமக்களுக்கு விளங்கவைக்க வேண்டும் என்று அப்படித்தானே எழுதி வருகிறார்கள். அதற்கு எங்கேபோய் முட்டிக் கொள்வது. நம் தி.க.காரர்களுக்கு இனத்தில் பார்ப்பனியம் வேண்டாமாம்; மொழியில் மட்டும் அவனில்லாமல் நடக்காதாம்! அதென்ன பார்ப்பனியச் சூத்திரத் தன்மையோ நமக்கு விளங்கவில்லை)

7. இனி, செய்திக்கு வருவோம். ‘பாடங்களை போதிக்கும்’ என்று தினமணி எழுதுகிறதே. பாடங்களைப் போதிக்கும் என்பதுதானே சரி சிவராமன் இப்படி ஆங்கிலத்தைத் தப்பும் தவறுமாக எழுதுவதை விரும்புவாரா? பின் ஏன் தமிழில் மட்டும் இந்தத் தவறுகளைச் செய்கின்றார். இதுதான் அக்ரகாரக் குறும்பு!

8. பிறமொழி என்றால் நம் தமிழ்ப் ‘பாமரர்’களுக்கு விளங்காதாம். எனவே, ‘அன்னிய’ மொழி என்று எழுதுகிறதுகள்.