பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

Y ஆருயிர் மருந்து னம் சென்ற காலத்து அவளைப் பற்றி அறிந்தவனாத லால், மணிமேகலையைப் பற்றிய எல்லா வரலாறுகளை யும் எடுத்துரைத்தான். அதைக் கேட்டபின் மணி மேகலை, • நின்கைப் பாத்திரம் என்கைப் புகுந்தது மன்பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் `அப்பிறப் பறிந்திலை யாயினும் ஆவயிற்று இப்பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ 91 என்று ஆபுத்திரனுக்கு அறிவுறுத்தினாள். மேலும் அவன் மணிபல்லவம் வந்தால் அவன் பிறவியைப் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் அறிய வழி உண்டு என்று கூறி அவனை அங்கு வருமாறு பணித்துத் தான் வான் வழிப் பறந்து, அன்றைப் பகலோன் மறையுமுன் மணிபல்லவம் சென்று அத் தீவை வலம்கொண்டு, பின் பீடிகையை வந்து வணங் கினாள். வணங்கும்போது மேலும் மேலும் அப்புத்த பீடிகைத் தன் பழம் பிறப்பை உணர்த்தியதை உணர்ந்து உணர்ந்து நின்றாள். ஆபுத்திரன் மணிபல்லவம் செல்லல் நிற்க, அங்கு மணிமேகலையால் உணர்ச்சி வரப் பெற்ற புண்ணியராசன் அந்தப் பொழிலை விட்டுத் தன் மாளிகை அடைந்தான். அங்கிருந்த தன் தாய் அமுத சுந்தரி வாயினால் தான் பொற் பசுவின் வயிற்றினின்று வந்த முட்டையுட் பிறந்ததையும், மகனின்மையால் பூமிசந்திரன் அவனைப் பெற்று வந்து போற்றிப் பின் அரசனாக்கியதையும் அறிந்தான். அறிந்ததும் மிகவும் R Mutai Research Library 3rd Cross Road, CPT Carnpus Taramani, Chennai - 600 113