பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3 அருட் செல்வம்




செல்வம் இருவகை. ஒருவகை கண்ணாற் கண்டு மகிழ்வது. மறுவகை மனத்தால் எண்ணி மகிழ்வது. முன்னது நிலம், நீர், பொன், மணி, பொருள் போன்றவை. பின்னது கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், அருள் போன்றவை.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.

என்பது வள்ளுவர் வாக்கு. "செல்வங்களில் மிக உயர்ந்த செல்வம் அருட் செல்வமேயாம்; ஏனெனில் பொருட் செல்வம் அறிவற்ற கீழ்மக்களிடத்தும் உள்ளத"' என்பது இதன் .பொருள். அருட் செல்வமானது மேன்மக்களிடத்தில் மட்டுமே காணப்படும் என்பது கருத்து.

அன்பும் அருளும் ஒன்றல்ல, அன்புக்கும் வேறானது அருள். 'அருளொடும் அன்பொடும்' என்ற தொடர் இதனை மெய்ப்பிக்கும் எனவும், அன்புடைமை பற்றிக் கூறிய வள்ளுவர் பின் அருளுடைமை பற்றியும் கூறியிருப்பதே இதற்குச் சான்றாக அமையும் எனவும் சிலர் கூறுவர்.