பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை மாநகரம் 28

அதன் மாட்சியை மனமாரப் புகழ்ந்துள்ளனர். கடற்கரையை அகலாது அணுகாது நேர்மையாகச் செல்லும் நெடுஞ்சாலையின் அழகும், விரிந்த வெண் மணற் பரப்பில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்றின் இன்பமும், கருங்கடலில் தவழ்ந்து வரும் கப்பல்களை ஒளிக்கரம் விரித்துத் துறைமுகத்திற்கு அழைக்கும் கலங்கரை விளக்கின் ஒளியும் சென்னைக்கே உரிய தனிச் செல்வமாகும்.