பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    தோழா !
    உலகினுக்காய் நீ படைக்கப் 
    பெறவே இல்லை; - 
    உயர்வானுக் காகவும்நீ 
    இல்லை. இந்த
    நிலவுலகின் அழகெல்லாம் 
    உனக்காகத்தான், 
    நீள்விசும்பின் விரிவனைத்தும் 
    உனக்காகத்தான்.
    உலகிதனில் காலூன்றி 
    எழுவாய், தோழா, 
    உயர்வான முகட்டில் நீ 
    உலவு வாயே!



                  31