பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    இளவேனில்
    தென்றல்மகள் கூத்தியற்றித் 
    தீங்குயிலைப் பாடவிடும், 
    மன்றல்பூங் காட்டில் 
    மனவிழியைத் துன்புறுத்தும்;
    முள்ளும் முளைத்திருக்கும் 
    முள்ளதுவே ஆனாலும் 
    கள்மலரின் கூட்டாளி 
    காதலன் - அள்ளி
    அணைக்கின்ற ஆசை 
    வெறிமிகுந்தோன் அன்பின் 
    பிணைப்புக்குக் காரணம் 
    பேசில் - இணைக்கும்
    உளவேனி லைத்தீர்க்கும் 
    ஓங்கும் இயற்கை 
    இளவேனில் ஈந்த 
    கொடை!



                 32