இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இளவேனில்
தென்றல்மகள் கூத்தியற்றித் தீங்குயிலைப் பாடவிடும், மன்றல்பூங் காட்டில் மனவிழியைத் துன்புறுத்தும்;
முள்ளும் முளைத்திருக்கும் முள்ளதுவே ஆனாலும் கள்மலரின் கூட்டாளி காதலன் - அள்ளி
அணைக்கின்ற ஆசை வெறிமிகுந்தோன் அன்பின் பிணைப்புக்குக் காரணம் பேசில் - இணைக்கும்
உளவேனி லைத்தீர்க்கும் ஓங்கும் இயற்கை இளவேனில் ஈந்த கொடை!
32