இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஓர் ஐயம்
அந்தோ இரவெலாம் ஆடி ஒடிச்
சந்து பொந்தெலாம் சிந்து பாடினும்,
படாத பாடெலாம் பட்ட போதினும்,
அடேஎனக் கொருதுளி குருதியே கிடைக்கும்;
ஆனால், ஐயகோ முயற்சியே இல்லா
மேனா மினுக்கிகள், தாமாய் ஒருசிறு
முயற்சியும் இன்றிப் பெயர்ச்சியும் இன்றி
இருந்த இடத்தில் இருந்த படியே
வட்டிக்கு விடுகிற கெட்டிக்காரர்கள்,
கடன்காரன் குருதி உடலின் இலாவணம்
உறிஞ்சி விடுகிறார் எப்படி?
வருந்தியது இங்ஙனம் திரிந்திடும் கொசுவே.
74