பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     ஓர் ஐயம்

     அந்தோ இரவெலாம் ஆடி ஒடிச்
     சந்து பொந்தெலாம் சிந்து பாடினும்,
     படாத பாடெலாம் பட்ட போதினும்,
     அடேஎனக் கொருதுளி குருதியே கிடைக்கும்;
     ஆனால், ஐயகோ முயற்சியே இல்லா
     மேனா மினுக்கிகள், தாமாய் ஒருசிறு
     முயற்சியும் இன்றிப் பெயர்ச்சியும் இன்றி
     இருந்த இடத்தில் இருந்த படியே
     வட்டிக்கு விடுகிற கெட்டிக்காரர்கள்,
     கடன்காரன் குருதி உடலின் இலாவணம்
     உறிஞ்சி விடுகிறார் எப்படி?
     வருந்தியது இங்ஙனம் திரிந்திடும் கொசுவே.

74