பக்கம்:இசைத்தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 முற்குறித்த ஏழிசைகளும் மெலிவு, சமன், வலிவு என்னும் மூவகைத் தானங்களிலும் நின்று, மூவகை இயக் கம் உடையனவாய் இசைப்பன. மெலிவு, சமன், வலிவு என்ற இம் மூன்றையும் மூவகை யியக்கம் என்றும், மூவகைத் தானம் என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுவர். இம் மூன்றினையும் பிற்காலத்தார் வழக்கின்படி முறையே மந்தரம், மத்திமம், தாரம் எனச் சேக்கிழாரடிகள் வழங்கி யுள்ளார். வீணை நரம்பு மெலிவுத் தானத்திலேயுள்ள குரல் இசைக்கு இசை கூட்டப்பட்டிருந்தால், சரிபாதி நரம்பிலே சம இசையாகிய குரலும், அதன் நான்கில் ஒரு கூற்றிலே உச்ச இசையாகிய குரலும், மூன்றில் ஒரு கூற்றிலே குரலுக்கு ஐந்தாம் இசையாகிய இளியும் ஒலிக்கும். ஏழிசை களும் படிப்படியாக மேன்மேல் உயர்ந்து செல்லும் இசை நிரலை ஆரோசை எனவும், படிப்படியாகத் தாழ்ந்து செல்லும் இசை நிரலை அமரோசை’ எனவும் சேக்கிழார் வழங்குவர். இவ்விரண்டினையும் முறையே ஏற்றம் இறக்கம் என்னும் பொருளினவாகிய ஆரோகணம் அவரோகணம் என்ற சொற்களால் வழங்குவர் இக்காலத்தார். இசைச்சுரங்கள் இரண்டிற்கு இடையே அமைந்த ஓசை வேறுபாட்டினை அளத்தற்கு அமைந்த நுண்ணிய இசையளவினைச் சுருதியென்பர். சுருதி, அலகு, மாத்திரை என்பன ஒரு பொருட் சொற்கள். ஏழிசைகளிலும் அமைந்த சுருதிகளின் தொகை இருபத்திரண்டு. நுண்ணிய இசைக் கூறுபாடுகளாகிய இச் சுருதிகள் நான்கு கூடி நிற்பது முற்றிசை எனப்படும். இது ஓரலகும், மூவலகும் என இரண்டாய்ப் பிரிந்த நிலையில், ஓரலகினைக் குற்றிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/32&oldid=745084" இலிருந்து மீள்விக்கப்பட்டது