பக்கம்:இசைத்தமிழ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9i ஒதுவார் பலரும் நன்கறிவர். இவ்வாறே பழந்தக்க ராகத்தை ஆரபியிற் பாடும் வழக்கமும் இருந்து வருகிறது. மேலே இன்ன பண்ணுக்கு இன்ன ராகம் எனக் குறித்த முறையில் நவரோசு என்ற ஒரே இராகம் கொல்லி கொல்லிக்கெளவாணம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம் என்ற நால்வேறு பண்களுக்கும் உரியதாக அமைக்கப் பெற்றிருத்தலையும், பகற் பண்களுக்குரியனவாகக் கூறப் படும் இராகங்கள்.சில மீட்டும் இராப்பண்களுக் குரியன வாகக் குறிக்கப்பெற்றிருத்தலையும் கூர்ந்து நோக்குங்கால், இங்ங்ணம் தேவாரப்பண்களுக்கு இராகம் வகுத்த காலத்தில் மேற்குறித்த நால்வேறு பண்களுக்கும் இடையே யமைந்த சிறப்பியல்பினை யுணர்ந்துபாடும் இசை மரபு மறக்கப்பட்டு மறைந்தமை நன்கு புலளும். ஆகவே, மேற்குறித்த பண் களுக்குப் பிற்காலத்தில் அமைந்த இராக அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு இன்ன பண்ணின் உருவம் இன்ன இராகத்தை ஒத்தது என முடிவு செய்வதைக் காட்டிலும், இன்ன இன்ன பண்ணமைந்த பதிகங்களை இன்ன இன்ன இராகங்களிற் பாடுதல் தக்கது என்று பிற்காலத்தார் வகுத்த இசைமுறை யெனவே அதனைக் கொள்ளுதல் ஏற்புடையதாகும் தேவாரத்திற் பயின்ற பண்கள் முன்ளுேர் நூற்று மூன்று எனப் பகுத்த பழைய தமிழ்ப் பண்களுள் அடங் கியன என்பது முன் விளக்கப்பட்டது. இப்பண்களின் இலக்கணங்களை யுணர்ந்து பாடும் இசைமரபு, நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாறுபாட்டால் பிற்காலத்தில் அருகி மறைவதாயிற்று. இந்நிலையில் திருக்கோயில்களிலும் திருமடங்களிலும் திருப்பதிகங்கள் ஒதப்பெறும் முறையினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/98&oldid=745155" இலிருந்து மீள்விக்கப்பட்டது