பக்கம்:இசையமுது 1, 1984.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் பகுதி ஆலைத் தொழிலாளி ஆலையின் சங்கே நீ ஊதாயோ? மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின்... சங்கே... காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே வேலை செய்தாரே என்வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே... மேலைத் திசைகளில் வெய்யிலும் சாய்ந்ததே வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே விண்ணைப் பிளக்கும் உன் தொண்டையேன் காய்ந்ததே ஆலையின் சங்கே.... குளிக்க ஒரு நாழிகை யாகிலும் கழியும் குந்திப் பேச இரு நாழிகை ஒழியும் விளைத்த உணர்விற் கொஞ்ச நேரம் அழியும் வெள்ளி முளைக்கு மட்டும் காதல்தேன் பொழியும் ஆலையின் சங்கே...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/10&oldid=1443325" இலிருந்து மீள்விக்கப்பட்டது